ADDED : செப் 01, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்,: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில், தண்டவாளத்தில், நேற்று முன்தினம் இரவு, 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு, பயணியர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், வாலிபர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார், தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது விரைவு ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.