sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பேருந்து மோதி கோவில் பூசாரி பலி

/

அரசு பேருந்து மோதி கோவில் பூசாரி பலி

அரசு பேருந்து மோதி கோவில் பூசாரி பலி

அரசு பேருந்து மோதி கோவில் பூசாரி பலி


ADDED : ஆக 25, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 62; தேன்பாக்கம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல கோவிலில் பூஜை செய்து விட்டு, வீடு திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையோரம் நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு விரைவு பேருந்து தாமோதரன் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், பேருந்தில் பயணம் செய்த பயணியர் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூணாம்பேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், அரசு விரைவு பேருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us