/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?
/
மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?
ADDED : செப் 09, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கொளத்துார், திருமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாரூக். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த உறவினர் சதாம் உசேன், 17, என்பவர் வந்துள்ளார்.
அவருக்கு திடீரென பல் வலி ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில், சதாம் உசேனுக்கு உதடு வீங்கியதால், கொளத்துார், கடப்பா சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த சதாம் உசேன், திடீரென வலிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.