sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி

/

தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி

தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி

தறிகெட்டு ஓடிய கார் போதை போலீஸ் அடாவடி


ADDED : ஜூன் 03, 2024 01:29 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் - மண்ணிவாக்கம் சாலையில், முடிச்சூர் அருகே நேற்று முன்தினம் இரவு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக ஒரு கார் சென்றது. சில வாகனங்கள் மீதும் மோதியது.

இதைக் கவனித்த இளைஞர் ஒருவர், 'பைக்'கில் விரட்டிச் சென்று, அந்த காரை நிறுத்தி முறையிட்டார். அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அந்த காரின் முன், 'போலீஸ்' என 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்தவர், மதுபோதையில் நிதானமின்றி இருந்துள்ளார். தன்னை போலீஸ்காரர் என அவர் கூறியுள்ளார்.

ஓட்டுனர் இருக்கையில் காவலர் சீருடை இருந்தது. அதில் பொருத்தியிருந்த 'பேட்ஜில்' ஸ்ரீராமதுரை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதிக மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us