sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்

/

துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்

துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்

துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்


ADDED : ஜூலை 23, 2024 01:23 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், கடந்த இரு ஆண்டுகளாக கோயம்பேடு சந்தையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி பணி முடிந்து, காய்கறி சந்தை,'சி' மற்றும் 'டி பிளாக்' இடையே நடந்து சென்று உள்ளார். அப்போது எதிரே வந்த தெரு நாய் ஒன்று, திடீரென குமாரின் காலில் கடித்துள்ளது.

அவர் காலை உதறியும், நாய் விடாமல் கடித்ததால், வலியால் துடித்துள்ளார்.இதைப் பார்த்த அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.குமாரை தெரு நாய் கடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, அங்காடி நிர்வாக குழு அளித்த புகாரின்படி, கோயம்பேடுசந்தையில் திரிந்த மூன்று தெரு நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பிடித்துச் சென்றனர்.

கோயம்பேடு சந்தையில் மாடுகள் மட்டுமின்றி, தெரு நாய்களும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், நுகர்வோர் பீதியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us