sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வன விலங்குகள் தொட்டியில் நீர் நிரப்பிய வனத்துறையினர்

/

வன விலங்குகள் தொட்டியில் நீர் நிரப்பிய வனத்துறையினர்

வன விலங்குகள் தொட்டியில் நீர் நிரப்பிய வனத்துறையினர்

வன விலங்குகள் தொட்டியில் நீர் நிரப்பிய வனத்துறையினர்


ADDED : ஏப் 27, 2024 12:09 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுக்கரணை, காட்டுக்கூடலுார், சோத்துப்பாக்கம், ராமாபுரம், எலப்பாக்கம் உள்ளிட்ட பகுதியை இணைத்து, வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன.

இக்காட்டில் மான், முயல், குள்ளநரி, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. பல வகையான பறவைகளும் உள்ளன.

மேலும், மான், மயில் போன்றவை, சில ஆண்டுகளாக அதிக அளவில் உலா வருவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இக்காட்டுப்பகுதியில், மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல், மே மாதங்களில், கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தண்ணீரைத் தேடி வன விலங்குகள், விவசாயப் பகுதிகளுக்கு செல்கின்றன.

இதை தடுக்கும் விதமாக, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை பகுதிகளில், அச்சிறுபாக்கம் வனத்துறையினர் வாயிலாக குளம் வெட்டப்பட்டு உள்ளது. இதில், டிராக்டர் இயந்திரத்தில் நீர் கொண்டு வரப்பட்டு, வன விலங்குகளுக்கு தேவையான நீர், அந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீர் தேடி விவசாய பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us