/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி காதலர்கள் பலி
/
தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி காதலர்கள் பலி
ADDED : செப் 04, 2024 02:17 AM
தாம்பரம்:கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் முகமது ஷரீப், 35. கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 28. இருவரும் நேற்று இரவு 8:30 மணியளவில் பேசியபடியே, கூடுவாஞ்சேரி - பொத்தேரி இடையே, ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற மின்சார ரயில், அவர்கள் மீது மோதியது.
இதில் முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே இறந்தார்; ஐஸ்வர்யா படுகாயமடைந்தார்.
தகவலின்படி போலீசார் விரைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார். இருவரும் காதலர்கள் என்றும், வேலை தேடி நேற்று காலை தான் சென்னைக்கு வந்ததாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, எதற்காக சென்னைக்கு வந்தார்கள், தண்டவாளத்தை கடக்க முயன்றது ஏன் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.