sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேரூராட்சி கழிப்பறையில் மறுப்பு ஊழியரை நடத்துனர்கள் முற்றுகை

/

பேரூராட்சி கழிப்பறையில் மறுப்பு ஊழியரை நடத்துனர்கள் முற்றுகை

பேரூராட்சி கழிப்பறையில் மறுப்பு ஊழியரை நடத்துனர்கள் முற்றுகை

பேரூராட்சி கழிப்பறையில் மறுப்பு ஊழியரை நடத்துனர்கள் முற்றுகை


ADDED : ஏப் 28, 2024 01:50 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை, மாமல்லை கழிப்பறையில் இலவசமாக அனுமதிக்க மறுத்ததால், ஊழியரை அவர்கள் முற்றுகையிட்டனர்.

சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு, செங்கல்பட்டில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவான்மியூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்தும், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இயற்கை உபாதைக்காக, அருகில் உள்ள பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை இலவசமாக அனுமதிப்பது தொடர்பாக, இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும்.

நேற்று காலை அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், கழிப்பறை சென்றபோது, இலவச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, அவர் மற்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் ஊழியரை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பேரூராட்சி சுகாதார பிரிவினர், அவர்களை சமாதானம் செய்து, இலவசமாக அனுமதிப்பதாக கூறினர்.

அதன்பின், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us