sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது

/

வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது

வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது

வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது


ADDED : ஜூன் 03, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், : மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆண்டுதோறும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.

மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.

கடந்த 2023- - 24-ல், கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட, 35க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.

அப்போது, 40,000த்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, 2 மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டு சென்றன.

இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய் நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன.

தற்போது, 1,000த்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன. தற்போது, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்ண நாரை, கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா உள்ளிட்ட பறவை இனங்களே தற்போதும் தங்கியுள்ளன.

குறிப்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த அனைத்து பறவைகளும், வேடந்தாங்கலுக்கு வந்த பின்னரே, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த வர்ண நாரை பறவைகள் வருகின்றன. பின், சரணாலயத்தில் இருந்து சீசன் முடியும் மே மாதத்தின் கடைசி மற்றும் ஜூன் முதல் வாரத்தில், அனைத்தும் செல்கின்றன.

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் பறவைகள் அமர்ந்து, கூடு கட்டி, அவற்றின் எச்சங்களால் மரங்களில் உள்ள பசுந்தழைகள் வர்ணம் பூசியது போன்று வெள்ளையாக காணப்படும்.

தற்போது, பறவைகள் இல்லாததால், மரங்கள் அனைத்தும் துளிர் விட்டு, பசுமை போர்த்தியது போல் உள்ளது.

பார்வையாளர்கள் வருகை

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, கடந்தாண்டு செப்., முதல், தற்போது ஏப்ரல் வரை, பெரியவர்கள் 75,000 மற்றும் சிறியவர்கள் 19,000 என, மொத்தம் 94,000த்திற்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.மே மாதத்தின் கடைசி வாரத்தில் சீசன் முடிவுற்றது. இருப்பினும், குறைந்த அளவு உள்ள ஒரு சில பறவைகள் மட்டும் தங்கியுள்ளன.ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் சீசன் முடிந்து, சரணாலயத்தில் உள்ள அனைத்து பறவைகளும், தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us