/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க கூடலூர் மக்கள் எதிர்பார்ப்பு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க கூடலூர் மக்கள் எதிர்பார்ப்பு
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க கூடலூர் மக்கள் எதிர்பார்ப்பு
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க கூடலூர் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், அரசு பள்ளி அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால், சிமென்ட் பூச்சு உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், மழைக்காலங்களில் கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.