/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான சாலையால் கொடூர்வாசிகள் அவதி
/
பழுதான சாலையால் கொடூர்வாசிகள் அவதி
ADDED : மார் 05, 2025 02:01 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த கொடூர் கிராமத்தில் இருந்து சீக்கனாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் 3 கி.மீ., சாலை உள்ளது. இது சிக்கனாங்குப்பம், ஆட்சிவிளாகம், வேட்டை காரகுப்பம் மற்றும் கொடூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரதான சாலையாக உள்ளது.
இப்பகுதியில் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுவதால், இந்த சாலையில் தினசரி ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.
இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துஉள்ளது. கோடை காலத்தில்சாலையில் புழுதி பறப்பதாகவும், மழைகாலத்தில் சாலை சகதியாக மாறுவதாகவும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக கொடூர் வேளாண் கூட்டுறவு சங்கம்எதிரே கடந்த இரண்டு ஆண்டுகளாக, சாலைபழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில்செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொடூர் வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.