sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது

/

பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது

பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது

பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது


ADDED : ஜூன் 16, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, தர்காஸ் பகுதியில் வசித்தவர் உத்திராடம், 56. இவர், நங்கநல்லுார் பகுதி மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேன்.

இவருக்கும், இவரது தம்பி சங்கருக்கும் குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில், தர்காஸ் பகுதியில் உள்ள ஏரிக்கு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக உத்திராடம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த அவரது தம்பி சங்கரின் மகன் சுபாஷ், 22, பெரியப்பாவான உத்திராடத்தை கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பினார்.

புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து சுபாஷை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று வக்கீலுடன் செங்கல்பட்டு நீதிமன்றம் சென்ற சுபாஷ், அங்கு நீதிபதி முன்னிலையில் சரணடைய முயன்றுள்ளார்.

அப்போது, அவரை விசாரித்த நீதிபதி, சுபாஷை கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைக்க, அவரது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.

பின், செங்கல்பட்டு நீதிமன்றம் வந்த கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், சுபாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us