sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்

/

மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்

மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்

மின்கம்பங்கள் உடைந்து சேதம் கீழக்கரணையில் விபத்து அச்சம்


ADDED : செப் 01, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி கீழக்கரணை பகுதியில், 2,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.

இவற்றிற்கு, மறைமலை நகர் மின் வாரிய அலுவலகம் வாயிலாக, சாலை ஓரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக, ஜி.எஸ்.டி., சாலை, கீழக்கரணை சாலை, பெரிய செங்குன்றம் செல்லும் சாலைகளில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து பல ஆண்டுகள் கடந்ததால், பல மின் கம்பங்கள் உடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., சாலையில், கீழக்கரணை பேருந்து நிலையத்தின் அருகில், வரிசையாக உள்ள மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன.

அதே போல், மெல்ரோசாபுரம் - பெரிய செங்குன்றம் சாலையோரம் உள்ள மின் கம்பங்களும் உடைந்து காணப்படுகின்றன. பருவமழைக் காலம் துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us