/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நண்பனை கொன்று புதைத்த சிறுவன் உட்பட மூவர் கைது
/
நண்பனை கொன்று புதைத்த சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜூன் 26, 2024 01:13 AM

மறைமலை நகர், மறைமலை நகர் என்.ஹெச்.,1 சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர்விக்னேஷ், 26. சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விக்னேஷ், கடந்த 11ம் தேதி, நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி சென்றவர்,மீண்டும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் கடந்த 14ம் தேதி, மறைமலை நகர்போலீசில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்குப் பதிந்த போலீசார், விக்னேஷ் மொபைல் போனில் பேசிய நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக, மறைமலை நகர் அடுத்தகோகுலாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 23, மற்றும் அவரது நண்பர் களான 17 வயது சிறுவன் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கோஷ்குமார் என்ற சிவா, 24, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அதில், மது போதையில்விக்னேஷை கத்தியால் வெட்டி கொலை செய்து, கோகுலாபுரம் ஏரியில் புதைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 11ம் தேதி, மறைமலை நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில், விக்னேஷ், விஸ்வநாதன், சிவா உள்ளிட்டோர் மது அருந்திய போது ஏற்பட்ட சண்டையில், விக்னேஷ் சிவாவை எட்டி உதைத்து விட்டு சென்றுள்ளார்.
இதில் கோப மடைந்த சிவா, என்னை அவன் அடிக்கிறான் நீ வேடிக்கை பார்க்கிறாயா என, விஸ்வநாதனிடம் முறையிட்டுள் ளார். அதனால், இருவரும் இணைந்து திட்டமிட்டு, விக்னேஷை கோகுலாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, கோகுலா புரம் ஏரியில் அருந்தியுள்ளனர்.
விக்னேஷுக்கு போதை ஏறியவுடன் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்து, அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இவர் களுக்கு உதவியாக, 17 வயது சிறுவனும் இருந்துள்ளார்.
நேற்று காலை 11:30 மணிக்கு, செங்கல்பட்டு தாசில்தார் பூங்குழலி முன்னிலையில், விக்னேஷை புதைத்த இடத்தை குற்றவாளிகள் அடையாளம் காட்டினர்.
தொடர்ந்து, விக்னேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அதே பகுதியில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, 17 வயது சிறுவன் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஸ்வநாதன் மீதுசெங்கல்பட்டு தாலுகா, மறைமலை நகர், மானாமதி, மயிலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.