sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூவருக்கு காப்பு

/

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூவருக்கு காப்பு

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூவருக்கு காப்பு

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூவருக்கு காப்பு


ADDED : மே 01, 2024 01:11 AM

Google News

ADDED : மே 01, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி, 62. இவர், அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஹோட்டல் சமையல் அறையில், இவரும் இவரின் மனைவியும் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் ஹோட்டல் இரும்பு கேட்டின் மீது, பெட்ரோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில், கேட்டில் இருந்த விளம்பர பலகை சேதமடைந்தது.

இது குறித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

'சிசிடிவி' கேமரா காட்சிகளில் பதிவான மூன்று வாலிபர்கள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில், கொளப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன், 22, ஜீவா, 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும், கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us