ADDED : ஜூன் 26, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்சேகர், 21. நேற்று முன்தினம் இரவு, தன் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை, வீட்டின்வெளியே நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, விஜய் சேகர் பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.