sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்ற இருவர் பொத்தேரியில் கைது

/

கஞ்சா விற்ற இருவர் பொத்தேரியில் கைது

கஞ்சா விற்ற இருவர் பொத்தேரியில் கைது

கஞ்சா விற்ற இருவர் பொத்தேரியில் கைது


ADDED : ஏப் 30, 2024 10:30 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஏரிக்கரை பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கருப்பு நிற 'ஷிப்ட்' காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அதில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த, சிறு சிறு கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

காரில் இருந்த இரண்டு நபர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் செங்கல்பட்டு, குண்ணவாக்கம் அடுத்த அமணம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 35, அவரின் நண்பர் விஜய், 33, என்பது தெரிய வந்தது.

இவர்கள், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடமிருந்த 1.300 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us