sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை

/

சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை

சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை

சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை


ADDED : ஆக 22, 2024 08:36 PM

Google News

ADDED : ஆக 22, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வா.ஊ.சி., நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் சோதனையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த ஜந்து பேர் போலீசாரை கண்டு தப்பியோட முயன்றனர்.

இதில், இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். மற்ற மூன்று பேரும் தப்பியோடினர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரைச் சேர்ந்த கோகுல், 26, புதுபெருங்களத்தூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பது தெரியவந்தது.

மேலும், இருவர் மீதும் மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் திட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச் சென்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us