ADDED : ஆக 03, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் தேரடி பகுதியில், மேலவலம் பேட்டை, குட்டைத் தெருவைச் சேர்ந்த அருள்மணி, 59, மற்றும் மதுராந்தகம் சந்திக்கரை தெருவைச் சேர்ந்த குமார், 55, ஆகிய இருவரும், நேற்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி, விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார், அருள் மணி, குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.