sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இ.சி.ஆரில் அரசு பஸ் மோதி டூ - வீலரில் சென்றவர் பலி

/

இ.சி.ஆரில் அரசு பஸ் மோதி டூ - வீலரில் சென்றவர் பலி

இ.சி.ஆரில் அரசு பஸ் மோதி டூ - வீலரில் சென்றவர் பலி

இ.சி.ஆரில் அரசு பஸ் மோதி டூ - வீலரில் சென்றவர் பலி


ADDED : ஆக 05, 2024 09:31 PM

Google News

ADDED : ஆக 05, 2024 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அடுத்த பாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 35. எலக்ட்ரிஷியன். இவர், நேற்று பரமண்கேணியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பயணவழி உணவகத்தில் பார்சல் வாங்கிக்கொண்டு, தனது பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, பயணவழி உணவகத்தின் எதிரே, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து, ராஜேஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து, கூவத்துார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை பறிமுதல் செய்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us