sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் டூ - வீலர்கள் நிறுத்தி அட்டூழியம் நகராட்சி கமிஷனரிடம் மனு

/

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் டூ - வீலர்கள் நிறுத்தி அட்டூழியம் நகராட்சி கமிஷனரிடம் மனு

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் டூ - வீலர்கள் நிறுத்தி அட்டூழியம் நகராட்சி கமிஷனரிடம் மனு

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் டூ - வீலர்கள் நிறுத்தி அட்டூழியம் நகராட்சி கமிஷனரிடம் மனு


ADDED : ஜூன் 28, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில், இரு சக்கர வாகன கட்டண பார்க்கிங் வசதி உள்ளது. தற்போது, அதிக அளவிலான வாகனங்கள் வருவதால், ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டண பார்க்கிங் இடம் நிரம்பிவிடுகிறது.

அதனால், அதன்பின் வரும் இருசக்கர வாகனங்கள், பேருந்து நிலைய வளாகத்திற்குள், பேருந்து நிறுத்தம் செய்யும் இடத்தில், அனுமதியின்றி அத்துமீறி நிறுத்தப்பட்டு வருகின்றன.

அதற்கு, தனியார் ஒப்பந்ததாரர் கட்டணம் வசூல் செய்து வருகிறார். இது, பேருந்து நிலையம் வரும் பயணியருக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

இது குறித்து, காமராஜபுரம், குபேரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், நகராட்சி கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாநகர பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களின் ஓய்வறையாக இருந்த இடம், தற்போது டூ - வீலர் கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.

ஒப்பந்தம் பெற்ற நபர், ஒப்பந்தம் பெற்ற எல்லை வரையறைக்குள் வாகனங்களைநிறுத்தாமல், பேருந்து நிறுத் தத்தில் பயணியருக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும்இடையூறாக வாகனங்களை நிறுத்தி அட்டூழியம் செய்து வருகிறார்.

எந்த ஒரு நகராட்சி பேருந்து நிலையத்திலும், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது இல்லை. எனவே, ஒப்பந்தம் பெறப்பட்ட நபர், அத்துமீறி செயல்படுவதை தடுத்து நிறுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி கமிஷனர் தாமோதரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us