/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருக்கரணை நிழற்குடை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
/
பெருக்கரணை நிழற்குடை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
பெருக்கரணை நிழற்குடை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
பெருக்கரணை நிழற்குடை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : செப் 15, 2024 11:17 PM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், அச்சிறுபாக்கம் சாலை சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
மேலும், பெருக்கரணையில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர்.
பயணியர் வசதிக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் நிழற்குடை சேதம் அடைந்தது
மழை மற்றும் வெயில் நேரத்தில், நிழற்குடையில் நிற்க முடியாமல் பயணியர் சிரமப்படுகின்றனர்.
புதிய நிழற்குடை அமைக்க, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜன., மாதம் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டன.
புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, மின்மாற்றி சேதமடைந்துள்ளதால், பலத்த காற்று வீசினால் நிழற்குடை மீது மின்மாற்றி சாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். ஆனால், மின் மாற்றியை வேறிடம் மாற்றும் பணி தாமதமாவதால், நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து, நிழற்குடை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.