sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை தடுப்பில் மோதி வடலுார் வாலிபர் பலி

/

சாலை தடுப்பில் மோதி வடலுார் வாலிபர் பலி

சாலை தடுப்பில் மோதி வடலுார் வாலிபர் பலி

சாலை தடுப்பில் மோதி வடலுார் வாலிபர் பலி


ADDED : மே 30, 2024 09:59 PM

Google News

ADDED : மே 30, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கடலுார் மாவட்டம், வடலுார் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார், 29. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை, வடலுாரில் இருந்து தனது 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு பழவேலி அருகில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், அஜித்குமார் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us