sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

/

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை

வி.ஏ.ஓ., கட்டடம் படுமோசம் புதிதாக அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 15, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில், பூஞ்சேரி, தனி வருவாய் கிராமமாக உள்ளது. பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தோர் நிலம், வீட்டுமனை பட்டா, அரசு நலத்திட்ட உதவி சான்று உள்ளிட்ட தேவைகளுக்காக, கிராம நிர்வாக அலுவலகம் வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தின் சுவர் விரிசல் அடைந்து, கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மேலும் சீரழிந்து வருகிறது.

இந்த கட்டடத்தில் போதிய இடவசதியும் இல்லை. மழைநீர் உட்புகுந்து, பதிவேடுகளை பாதுகாக்க சிரமப்படுகின்றனர். கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us