/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
/
கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : ஆக 30, 2024 12:42 AM

திருப்போரூர்,:விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், பொது இடத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர்.
அவற்றை, செங்கை மாவட்டத்தில், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் கரைக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி ஆகியோர், நேற்று கோவளம் கடலில் சிலைகள் கரைக்கும் பகுதியை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, செங்கல்பட்டு சப் -- -கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் மீனா, பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன், தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார், உதவி கமிஷனர் வெங்கடேசன், பி.டி.ஓ., சிவகலைசெல்வன், ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் உட்பட பலர் இருந்தனர்.
சிலைகள் ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிப்பது, அவை கடற்கரை செல்லும் மற்றும் வெளியேறும் வகையில் அணுகு பாதை அமைப்பது, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி, சிலைகளை கடலில் இறக்குவதற்கான கிரேன் இயந்திர வசதி ஏற்படுத்துவது, தீயணைப்பு வீரர்கள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.