sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திறப்பு விழாவோடு பூட்டி கிடக்கும் விஞ்சியம்பாக்கம் உடற்பயிற்சி கூடம்

/

திறப்பு விழாவோடு பூட்டி கிடக்கும் விஞ்சியம்பாக்கம் உடற்பயிற்சி கூடம்

திறப்பு விழாவோடு பூட்டி கிடக்கும் விஞ்சியம்பாக்கம் உடற்பயிற்சி கூடம்

திறப்பு விழாவோடு பூட்டி கிடக்கும் விஞ்சியம்பாக்கம் உடற்பயிற்சி கூடம்


ADDED : ஆக 18, 2024 01:00 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், திருத்தேரி, பாரேரி, பெரிய விஞ்சியம்பாக்கம், சின்ன விஞ்சியம்பாக்கம், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு, 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் வாடகைக்கு தங்கி, மறைமலை நகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

இந்த ஊராட்சியில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் அம்மா உடற்பயிற்சிக் கூடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது.

அது, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. உடற்பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், மக்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டியே கிடக்கிறது.

இதுகுறித்து, அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:

அம்மா உடற்பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா மட்டுமே கண்டது. அதன்பின், பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால், அதன் உள்ளே உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி வருகிறது.

சிறு மழைக்கே பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே, இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us