sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருநீர்மலை ஏரியில் தன்னார்வலர்கள் துாய்மை பணி

/

திருநீர்மலை ஏரியில் தன்னார்வலர்கள் துாய்மை பணி

திருநீர்மலை ஏரியில் தன்னார்வலர்கள் துாய்மை பணி

திருநீர்மலை ஏரியில் தன்னார்வலர்கள் துாய்மை பணி


ADDED : மே 04, 2024 10:39 PM

Google News

ADDED : மே 04, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை:குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலையில் பெரிய ஏரி உள்ளது. 194.01 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பால் 146.94 ஏக்கராக குறைந்துவிட்டது.

மேலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலந்து மாசடைந்து வருகிறது.

அதன் கரையில் சீமை கருவேல மரங்கள் மண்டியும், ஏரியினுள் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டும், ஆகாய தாமரை வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், 'எக்ஸ்னோரா' அறக்கட்டளை மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இணைந்து, இந்த ஏரியில் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஏரியில் கிடந்த 3 டன் குப்பை கழிவுகளை அகற்றினர்.

மாநகராட்சி ஊழியர்கள் வந்து, அவற்றை எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us