sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

/

செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?


ADDED : மார் 25, 2024 05:33 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், : செய்யூர் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

செய்யூர், பாளையர்மடம் பகுதியில் உள்ள குளக்கரை மீது உள்ள 'இ - -சேவை' மையத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த இ - -சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், மன்ற கூட்டங்கள் நடத்தவும், அலுவலக கோப்புகளை பாதுகாக்கவும், சேவைக்காக வருவோர் அமரவும், போதிய இடவசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக புதிய ஊராட்சி கட்டடம் அமைக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில், காலி இடம் இல்லாததால், புதிய ஊராட்சி கட்டடம் அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றி, புதிய ஊராட்சி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us