sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு தடுக்க பூங்கா அமைக்கப்படுமா?

/

புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு தடுக்க பூங்கா அமைக்கப்படுமா?

புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு தடுக்க பூங்கா அமைக்கப்படுமா?

புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு தடுக்க பூங்கா அமைக்கப்படுமா?


ADDED : ஜூன் 10, 2024 12:59 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் சென்னை- - திருச்சி நெடுஞ்சாலையை கடந்து, எலப்பாக்கம் மற்றும் பேரூராட்சி பகுதிக்கு செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதன் இருபக்கமும் உள்ள காலி இடங்கள் குப்பை கொட்டப்பட்டு, செடி கொடிகள் வளர்ந்து, சுற்றித்திரியும் கால்நடைகள் தங்குமிடமாக உள்ளது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் நாள்தோறும் மாலை நேரங்களில், இப்பகுதியினை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன.

இதனால், அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனை, மின் வாரிய அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எலப்பாக்கம், திருமுக்காடு போன்ற கிராம பகுதிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே, மேம்பாலத்தின் கீழ் புறவழிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us