sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

/

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?


ADDED : ஆக 12, 2024 11:44 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 30,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில், பல இடங்களில் குடியிருப்புப் பகுதியை விட அதிக உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஆண்டு ஓதியூர், பனையூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டனர்.

மேலும், பல இடங்களில் மழைநீர் வெளியேற சாலை நடுவே பள்ளம் தோண்டியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை, இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்வாய் மற்றும் நீர் வழித்தடங்களை சீரமைக்கவும், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் சாலையில் குழாய்கள் அமைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us