sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'எஸ்' வடிவ சாலை வளைவு வேகத்தடை அமையுமா?

/

'எஸ்' வடிவ சாலை வளைவு வேகத்தடை அமையுமா?

'எஸ்' வடிவ சாலை வளைவு வேகத்தடை அமையுமா?

'எஸ்' வடிவ சாலை வளைவு வேகத்தடை அமையுமா?


ADDED : ஜூலை 15, 2024 06:12 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் - பவுஞ்சூர் இடையே, 12 கி.மீ., நீளமுடைய மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அம்மனுார், செங்காட்டூர், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த சாலையில் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து, லாரி என, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. செய்யூர் பஜார் பகுதி - வடக்கு செய்யூர் இடையே 'எஸ்' வடிவ சாலை வளைவு உள்ளது.

இந்த சாலை பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

மேலும், அடிக்கடி விபத்தில் சிக்கி சிறு காயமடைந்தும் வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சாலை வளைவு பகுதியை கடந்து செல்கின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை வளைவு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us