sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?

/

கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?

கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?

கூவத்துார் பஜார் வீதியில் வடிகால் வசதி அமையுமா?


ADDED : செப் 17, 2024 11:44 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை அருகே பஜார் வீதி உள்ளது. பஜார் வீதியின் இரண்டு புறங்களிலும், மளிகை கடை, நகைக்கடை, ஜவுளிக்கடை, பால் கடை, காய்கறி கடை என, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன..

கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காத்தான்கடை, கடலுார், நெற்குணம்பட்டு, வடபட்டினம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்க, பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர்.

பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், சாலை மட்டத்தை விட, 20க்கும் மேற்பட்ட கடைகள் தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைநீர் கடைகளில் புகுந்து, வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கூவத்துார் பஜார் வீதியில், மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us