/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரைவு ரயில் மோதி செங்கையில் பெண் பலி
/
விரைவு ரயில் மோதி செங்கையில் பெண் பலி
ADDED : ஜூலை 04, 2024 10:36 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் ரமணிபாய், 46. செங்கல்பட்டு அண்ணா நகரில் மளிகை கடை நடத்தி வந்தார்.
நேற்று காலை, ரமணிபாய் மேலமையூர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த விரைவு ரயில் மோதியது.
அதில், உடல் மூன்று துண்டுகளாகி, சம்பவ இடத்திலேயே ரமணிபாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு ரயில்வே போலீசார், ரமணிபாய் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,, ரமணிபாய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்த போது, ரயில் மோதி உயிரிழந்தாரா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.