/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிரஷர் ஆலை மிஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு
/
கிரஷர் ஆலை மிஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 12, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் : குன்றத்துார்,சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி கோமதி, 35. இவர், அதே பகுதியில் ஜல்லி கற்கள் அரைக்கும் கிரஷர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று பணியில் ஈடுப்பட்டபோது, இயந்திரத்தில் சிக்கிய எம் - சாண்ட் மண்ணை அகற்ற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அதே இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்.
இதில், கை, முகத்தில் பலத்த காயமடைந்த கோமதியை, அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

