/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி
/
பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி
ADDED : பிப் 25, 2025 11:55 PM
உத்திரமேரூர், வாலாஜாபாத் தாலுகா, ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் கர்ப்பிணி மனைவி செல்வி, 23, உட்பட 10க்கும் மேற்பட்டோர், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் கொட்டகை அமைத்து, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, ரமேஷ் தன் கர்ப்பிணி மனைவியை கொட்டகையிலே விட்டுவிட்டு, வழக்கம்போல் மரம் வெட்டும் பணிக்கு, சக தொழிலாளர்களுடன் சென்றார்.
அப்போது, செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின், மாலை 6:00 மணிக்கு கொட்டகைக்கு ரமேஷ் வந்தபோது, செல்வி ஆண் குழந்தை பிரசவித்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அப்பகுதியினர், உத்திரமேரூர் சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சுகாதாரத் துறையினர், நேற்று காலை 10:00 மணிக்கு தான் வந்தனர். எந்த முதலுதவியும் கிடைக்காமல் இருந்த பிஞ்சு குழந்தையை மீட்டு, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். பெண் உயிரிழந்தது குறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

