sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி

/

பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி

பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி

பிரசவித்த பெண் கவனிப்பாரின்றி பலி


ADDED : பிப் 25, 2025 11:55 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், வாலாஜாபாத் தாலுகா, ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் கர்ப்பிணி மனைவி செல்வி, 23, உட்பட 10க்கும் மேற்பட்டோர், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் கொட்டகை அமைத்து, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, ரமேஷ் தன் கர்ப்பிணி மனைவியை கொட்டகையிலே விட்டுவிட்டு, வழக்கம்போல் மரம் வெட்டும் பணிக்கு, சக தொழிலாளர்களுடன் சென்றார்.

அப்போது, செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின், மாலை 6:00 மணிக்கு கொட்டகைக்கு ரமேஷ் வந்தபோது, செல்வி ஆண் குழந்தை பிரசவித்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அப்பகுதியினர், உத்திரமேரூர் சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சுகாதாரத் துறையினர், நேற்று காலை 10:00 மணிக்கு தான் வந்தனர். எந்த முதலுதவியும் கிடைக்காமல் இருந்த பிஞ்சு குழந்தையை மீட்டு, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். பெண் உயிரிழந்தது குறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us