sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உறுப்பினராக பதிவு செய்ய மகளிர் நல வாரியம் அழைப்பு

/

உறுப்பினராக பதிவு செய்ய மகளிர் நல வாரியம் அழைப்பு

உறுப்பினராக பதிவு செய்ய மகளிர் நல வாரியம் அழைப்பு

உறுப்பினராக பதிவு செய்ய மகளிர் நல வாரியம் அழைப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கணவனை இழந்தோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம்.

இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளகணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் வாரியத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென, தற்போது உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.in.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள, webApplication வாயிலாக தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெறலாம்.

இ- - சேவை மையங்களிலும் தங்களின் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் போன்ற உதவிகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us