/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது
/
போலீஸ் என கூறி மிரட்டல் செங்கையில் வாலிபர் கைது
ADDED : மே 28, 2024 11:28 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பழவேலி இருளர் குடியிருப்பு பகுதியில், காதலர்கள் மற்றும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் மடக்கி, போலீஸ் என கூறி மிரட்டியுள்ளார்.
இதைக் கண்ட பழவேலி ஊராட்சி துணைத் தலைவர் பிரகாசம், 40, தட்டிக்கேட்ட போது, செங்கல்பட்டு ஆயுதப்படை போலீஸ் என கூறியுள்ளார்.
இது குறித்து,செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு பிரகாசம் தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், அங்கு பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக்காட்டுபேட்டை அடுத்த காவூர்கிராமத்தை சேர்ந்த ரமேஷ், 37, என்பதும்,தனியாக உள்ள காதலர்களிடம் பணம்கேட்டு மிரட்டி வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில்அடைத்தனர்.