sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மர்ம வாகனம் மோதி வாலிபர் பலி

/

மர்ம வாகனம் மோதி வாலிபர் பலி

மர்ம வாகனம் மோதி வாலிபர் பலி

மர்ம வாகனம் மோதி வாலிபர் பலி


ADDED : மார் 08, 2025 11:22 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டாங்கொளத்துார், காட்டாங்கொளத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று அதிகாலை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துபோலீசார் அந்த உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், விபத்தில் இறந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த வீரமணி,28, என்பதும், சென்னை போரூர் பகுதியில் தங்கி 'பிளிங்கிட்' என்ற நிறுவனத்தில் காய்கறி 'டெலிவரி' செய்யும் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. காட்டாங்கொளத்துார் பகுதியில் சாலையைக்கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததும் தெரிந்தது.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us