/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
/
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ADDED : ஆக 29, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா, 34. திருமணமாகவில்லை. ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, விடுதி மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனால், மின்பழுதை சரிசெய்யும் முயற்சியில், மின் பெட்டியை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே சிவா பலியானார். துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

