sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வெளியூரிலிருந்து சென்னை திரும்ப 1,000 சிறப்பு பஸ்கள்

/

வெளியூரிலிருந்து சென்னை திரும்ப 1,000 சிறப்பு பஸ்கள்

வெளியூரிலிருந்து சென்னை திரும்ப 1,000 சிறப்பு பஸ்கள்

வெளியூரிலிருந்து சென்னை திரும்ப 1,000 சிறப்பு பஸ்கள்


ADDED : அக் 02, 2025 10:57 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆயுத பூஜை பண்டிகை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறைக்காக, சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ரயில்களில் மட்டுமே, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே விடுமுறை முடிந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, நேற்று மாலை முதல் புறப்படத் துவங்கினர். இதற்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு சென்ற மக்கள், நேற்று மாலை முதல் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு மீண்டும் திரும்ப துவங்கி விட்டனர். இன்று மாலை முதல், அதிகளவில் பயணியர் வருவர்.

எனவே, பயணியர் வசதிக்காக, வெளியூரில் இருந்து சென்னைக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல், கோவை, திருப்பூர், பெங்களூருக்கும் வழக்கமாக செல்லும் பேருந்துகளோடு, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணியர் தேவை அதிகரிக்கும்போது, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல், கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, 24 மணி நேரமும் மாநகர இணைப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us