/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமண மண்டபத்தில் 'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு
/
திருமண மண்டபத்தில் 'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு
திருமண மண்டபத்தில் 'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு
திருமண மண்டபத்தில் 'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு
ADDED : டிச 05, 2024 11:18 PM

மாதவரம்,
மாதவரம் பால்பண்ணை, அன்னை வேளாங்கண்ணி நகரில் 'கன்னிகா மகால்' என்ற பெயரில் திருமண மண்டபம் உள்ளது.
இங்கு, நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியின்போது, பகல் 12:45 மணியளவில் 2வது தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு வர, மின் துாக்கியில் 11 பேர் ஏறி உள்ளனர்.
அதிக பாரம் காரணமாக, மின் துாக்கி திடீரென பழுதாகி, முதல் மற்றும் 2ம் தளத்திற்கு இடையே நின்றது. இதனால், அதில் இருந்தவர்கள் அலறினர்.
மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, மின் துாக்கியின் கதவை உடைத்து, உள்ளே இருந்த 11 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதில் சிக்கியோர், 20 நிமிடத்திற்கும் மேலாக உள்ளேயே இருந்ததால், இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பினர்.