sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்

/

புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்

புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்

புறநகராக அறிவிக்காததால் 11 ரயில் நிலையங்கள்... மேம்படவில்லை திட்டங்கள், வசதிகள் கொண்டு வருவதிலும் சிக்கல்


ADDED : ஜூன் 30, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு :செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில் உள்ள 11 ரயில் நிலையங்களை, ரயில்வே துறை புறநகராக அங்கீகரிக்காததால், 'ரிட்டர்ன்' டிக்கெட், கூடுதல் ரயில் சேவை, தானியங்கி சிக்னல், வாகன நிறுத்தங்கள் போன்ற எந்தவித சேவைகளும் கிடைக்காமல் உள்ளதாக ரயில் பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

தெற்கு ரயில்வே, சென்னை மண்டலம் கீழ் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, வேளச்சேரி அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி, ஆவடி போன்ற இடங்களுக்கு சில நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில் சேவை உள்ளது. தவிர, நாள் முழுதும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

ஆனால், மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான பகுதிகளுக்கு, போதிய ரயில் சேவை இருப்பதில்லை. இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணிக்கையும், குறைவாகவே உள்ளன.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு சென்று பணிபுரிவோர் மற்றும் சொந்த வேலை காரணமாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில், 11 ரயில் நிலையங்களின் வருமானம், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்து வருகிறது.

அப்படியிருந்தும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான 56 கி.மீ., துாரத்தை சென்னையின் புறநகராக ரயில்வே அங்கீகரிக்காதது, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும், பயணியர் சேவைக்கும் பிரச்னையாகவே நீடிக்கிறது.

செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி போன்ற வழித்தடங்களை சென்னையின் புறநகர் பகுதியாக ரயில்வே நிர்வாகம் அங்கீகரித்து, அங்கு சேவைகளை மேற்கொள்கிறது.

ஆனால், அதிக பயணியரை கையாளும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான பகுதியை புறநகராக அங்கீகரிக்காததால், 'ரிட்டர்ன் டிக்கெட்' கூட எடுக்க முடிவதில்லை என, பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணியர் சங்க செயலர் கே.ரங்கநாதன் கூறியதாவது:

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான 11 ரயில் நிலையங்கள் வாயிலாக, கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது.

இப்பகுதியை, புறநகர் வகைப்பாட்டின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய இணை அமைச்சர் சோமண்ணாவிடமும் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு, காஞ்சிபுரம் பகுதியை புறநகராக அறிவிப்பது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்மண்டல மேலாளரையும் சந்திக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கூறினார்.

11 ரயில்

நிலையங்கள்



பிரச்னைகள் விபரம்

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான 56 கி.மீ., துாரத்தை புறநகராக அங்கீகரிக்காததால், அன்றாடம் ரயில்வே துறையில் மேம்படாமல் உள்ள பிரச்னைகள் விபரம்:l காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் நீங்கலாக மற்ற ரயில் நிலையங்களில் ரிட்டர்ன் டிக்கெட் கொடுப்பதில்லை; முதல் வகுப்பு டிக்கெட்டும் கொடுப்பதில்லைl காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் நீங்கலாக மற்ற ரயில் நிலையங்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடத்தப்படுகிறது. இவற்றை ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த வழிவகை கிடைக்கும்l தானியங்கி சிக்னல் பொருத்தப்படாமல் உள்ளது. பணியாளர்கள் மூலமாகவே, சிக்னல் காண்பிக்கும் நடைமுறை நீடிக்கிறதுl குடிநீர், கழிப்பறை, வீல் சேர், கண்காணிப்பு கேமரா போன்ற அடிப்படையான வசதிகள் முழுமையாக கிடைக்கும். இப்போது, எந்த வசதிகளும் இல்லைl ரயில்வே போலீசாரின் புறநகர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இப்போது புகார் அளிக்க வேண்டுமானால், செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் செல்ல வேண்டும்l அதிக எண்ணிக்கையில் ரயில் சேவை கிடைக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மின்சார ரயில் சேவை, சென்னைக்கும், செங்கல்பட்டு, அரக்கோணத்திற்கும் கிடைக்கும்.



கூடுதல் செலவு

அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், பகல் 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் அரக்கோணம் மார்க்கம் மற்றும் சென்னை கடற்கரை மார்க்கமாக எந்த ஒரு மின்சார ரயிலும் இயக்கப்படுவதில்லை.இதனால் திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்வோர் இடைப்பட்ட நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தை பிடித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சென் னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தாம்பரம் மருத்துவமனைகளுக்கு செல்வோர் கூடுதல் பணம் செலவிட வேண்டி உள்ளது.இதை தவிர்க்க, அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழியாக சென்னை செல்வதற்கு ரயில்கள் இயக்க அறிவுரை வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us