/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்
/
1,100 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்
ADDED : ஆக 14, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடியில், 1,100 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி, வீராபுரம் அந்தோணியார் நகரில் சோதனை நடத்திய ஆவடி டேங்க் போலீசார், தகர ஷீட் அறையில், 1,100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 33, என்பவரை கைது செய்தனர்.
அவர், பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வந்ததும், அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்தனர்.