sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

11ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

/

11ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

11ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

11ம் நுாற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு


ADDED : ஜன 22, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 22, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமை வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை இருந்தது.

இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது:

பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. புத்தர் கண்களை மூடி, ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் வகையில், 1 அடி உயரத்தில் சிலை அமைந்துள்ளது. பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், இரு காதுகளும், தோள் பட்டை வரையில் நீண்டுள்ளன.

சிலையின் மூக்கு சேதமடைந்துள்ளது. இடது தோள் பட்டை முதல் இடுப்பு வரை, சீவர ஆடை அணிந்தபடி நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளது.

வலது கால், இடது தொடையின் மீதும், இடது கை, வலது கால் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறது. வலது கையின் விரல்கள் தரை நோக்கி உள்ளது.

இது, கோபுரத்தில் உலக அமைதிக்கான நான்கு சிலைகளில் ஒரு சிலையின் அமைப்பு என, வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கி.பி., 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை என, உதவி தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ், உதவி கல்வெட்டாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us