/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர் கூட்டத்தில் 12 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 12 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 22, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கத்தில், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளது. இங்குள்ள கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த முகாமில், நில பிரச்னை, பண மோசடி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட, 12 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., உத்தரவிட்டார்.