/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்
/
19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஜன 15, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : சித்தார்காடு கிராமத்தில் வரும் 19ம் தேதி, மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:
செய்யூர் அடுத்த, சித்தார்காடு கிராமத்தில், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இதில், அனைத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.