sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாமதமாக வீடு ஒப்படைப்பு ரூ.2 லட்சம் இழப்பீடு

/

தாமதமாக வீடு ஒப்படைப்பு ரூ.2 லட்சம் இழப்பீடு

தாமதமாக வீடு ஒப்படைப்பு ரூ.2 லட்சம் இழப்பீடு

தாமதமாக வீடு ஒப்படைப்பு ரூ.2 லட்சம் இழப்பீடு


ADDED : நவ 28, 2024 02:43 AM

Google News

ADDED : நவ 28, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைவிட, 19 மாதங்கள் தாமதமாக வீட்டை ஒப்படைத்த கட்டுமான நிறுவனம், 2 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்துார் ஆலப் பாக்கம் பகுதியில், 'எஸ்.எஸ்.எம். பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ்' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் வீடு வாங்க, இந்திரா என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, 2016 செப்டம்பரில் வீட்டை ஒப்படைக்க வேண்டும். ஆனால், பணிகள் முடியாததால் வீடு ஒப்படைப்பு தாமதமானது.

ரியல் எஸ்டேட் ஆணையத்தில், இந்திரா மனு செய்தார். மனுவை விசாரித்த ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து, வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதில், 19 மாதங்கள் தாமதமாகவே, மனுதாரருக்கு கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைத்துள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு நிவாரணமாக, 2 லட்ச ரூபாய்; வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயை, கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us