/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லியில் நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி
/
நெல்லியில் நாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி
ADDED : மார் 06, 2024 12:08 AM

மதுராந்தகம்,:வேடந்தாங்கல் அருகே உள்ள நெல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜி, 55, என்பவர், 20 ஆடுகளும், எத்திராஜ், 45, என்பவர் 30 செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்து, இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர்.
நேற்று, ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்காக வந்து பார்த்த போது, ஆடுகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் கொட்டகைக்குள் புகுந்த நாய்கள், ஆடுகளை கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியுள்ளன.
இதில், ராஜி என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகள், எத்திராஜுக்கு சொந்தமான 11 ஆடுகள் என, மொத்தம் 20 ஆடுகள் பலியாகின. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், கடிபட்டு நடக்க முடியாமல் உள்ளன.
இதனால், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, கால்நடை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நெல்வாய் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நாய் கடித்து இறந்த ஆடுகளை பரிசோதித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட நபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

