/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூண்டியில் ரூ.3 கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணி
/
பூண்டியில் ரூ.3 கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணி
ADDED : பிப் 25, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் நீர் விளையாட்டு, படகு சவாரி, மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட உள்ளது.
இப்பகுதியில் படகு குழாம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள், 3.33 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.