/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 மாடி கட்டடத்திற்கு இரும்புலியூரில் 'சீல்'
/
3 மாடி கட்டடத்திற்கு இரும்புலியூரில் 'சீல்'
ADDED : ஜன 12, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம், இரும்புலியூரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடத்திற்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில், கீழ் தளத்தில் கார் பார்க்கிங் அமைத்தால், மூன்று தளத்திற்கு, கார் பார்க்கிங் இல்லை என்றால், இரண்டு தளத்திற்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
தாம்பரம், இரும்புலியூரில், சந்திரன் என்பவர், மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அனுமதி பெறாமல், மூன்று மாடி கட்டடம் கட்டி வந்தார். இதையறிந்த, நகரமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அந்த கட்டடத்திற்கு நேற்று சீல் வைத்தனர்.